Friday, 25 March 2011

நாய்குட்டிகள் ....

நேற்று ரோட்டில் ஒரு உயர் ரக நாயை பார்த்தேன் ...

சிக்கு பிடித்து ... சொறி பிடித்து அலைந்து கொண்டு இருந்தது ...

யார் விட்டு சென்றார்களோ ...அதன் கண்ணில் ஒரு வெறுமை .....

பயம் .... எப்புடி ரோட்டில் நடக்கவேண்டும் என்று கூட தெரியாமல் தடுமாறியது ...

என்ன கொடுமை இது ...

மனிதத்தின் மறுபக்கம் கேவலம் இது ...

மூன்று நாய்களை என்னால் மறக்க முடியாது .

1 . எங்கள் ஊரில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணம் சென்ற ஒரு குடும்பத்துடன் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் நாயை ஏற்ற மறுத்தால் பிரியாவிடை கொடுத்து வந்தார்கள் ...மறுநாள் காலை அவர்கள் முன்னே வீடு வந்து சேர்ந்தது அந்த நன்றியுள்ள ஜீவன் ...

2 .வெள்ளாச்சி ..எங்கள் தெருவின் அழகான நாய் என்று கூறப்படும் நாய் ...

நாய் வண்டியில் இருந்து தப்பிக்க வைக்க ,,,அதனை எங்கள் வீட்டுக்குள் வைது அடைத்தோம் ..

அன்று நாயின் கோவமும் எங்கள் வீட்டாரின் கோவமும் என்னை தொலைத்து எடுத்தது

அந்த நாயின் முதலாளி ( அவர் ஒரு ஆசிரியர் ) தேடி வந்து ... எங்கள் வீட்டின் கிரில் கதவை பற்றி அழுத அழுகை இன்னமும் என் கன்னி நிற்கிறது ...

3 மாண்டி என்று அழைக்கப்பட்ட எங்கள் வீடு நாய்க்குட்டி ,,,

அது ரிக்ஷாவில் வந்து இறங்கி 1 வரு\டம் கழித்துதான் .தெரிந்தது அது டமாரம் என்று ...

காது கேக்காத அந்த நாயின் முதலாளியானேன் . மிகவும் பிரியமாய் நடந்து கொள்ளும் ..

2வருடம். நன்றாய் ஒர்ர் சுற்றியது ... பிண்டு எங்கள் வீடு மாடியே ( மண்டபம் போல் இருக்கும் )சரணாகதியாக வைத்தேன் ..எங்கேயும் சென்று அடிபட்டு செத்துவிடுமோ என்ற பயத்தில் ... என்ன நோய் என்று டாக்டர் கண்டுபுடிக்கமுடியமலேயே மரணம் அடைந்தது ...( 7 வருடம் வாழ்வு ).. இன்றும் என்னிடம் அதன் போடோ உள்ளது ... கண் கலங்க வைக்கும் விசுவாசி..

ஒரு வேலை அதற்கு காது கேட்டிருந்தால் .. எல்லா நாய்களை போலவே அதுவும் இருந்திருக்கும் .....

ம்ம்ம்ஹம்ம்ம் ...

நான் கேட்பதெல்லாம் இதுதான் ...

வசதியாக வளர்த்த நாயை இப்ப்புடி தெருவில் விட்டு செல்வது கொடுமை ,,,

வாழ்ந்து கெடுவது மனிதற்கு மட்டும் அல்ல இதற்கும் பொருந்தும் ....

நீங்கள் நாய் வளருங்கள் .. அதன் இறுதி வரை இருக்க முடியும் / அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்வை தரமுடியும் அன்றால் மட்டுமே .....

எந்த நாயும் தன எஜமானனை விட்டு தருவது இல்லை ..

ஆனால் நாம் ?????

நன்றி யுள்ள ஜீவன் அது ... நாம் நன்றி கெட்டவர்களாக வேண்டாம் ...

தயவுடன் .......இருப்போம் ...

முற்றம் வைத்த வீடு அது ....

முற்றம் வைத்த வீடு அது ....

எப்போதும் யாராவது சொந்தங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ...

நடமாடி கொண்டே இருப்பார்கள் ....

எனக்கும் அக்காவிற்கும் எப்போதும் சண்டை நடக்கும் ..

மழை காலத்தில் யார் முற்றதில் கொட்டும் நீரில் குளிப்பது என்று ///

பத்தாதற்கு பக்கத்துக்கு வீடு சிறுவர்கள் வேறு .....

ஆனால் சண்டை இட்டாலும் எல்லோரும் குளிப்போம் ..முற்றத்து அருவியில் ...

நான் நினைப்பது உண்டு எதற்கு தலைவாசல் கதவு என்று ..

எப்போதும் திறந்தே இருக்கும் .. யாரோ வருவதும் [போவதுமாய் .....

அடுப்பில் அம்மா இருந்தபடியே.,,,,

கதவு குளிர் கால அரணாக மட்டும்மே பயன்படும் ...

மற்ற நேரங்களில் ஓரமாய் சாதுவை போல் இருக்கும் ....

மிக பெரிய வீடு என்பாதலே எவளோ பேர் வந்தாலும் ...தெரியாது ...

சொந்தங்கள் கூடிய நாட்கள் அது .... நாய்குட்டிகள் கூட நடு வீட்டில் தூங்கும் ,,,

யாரும் ஒன்றும் சொல்வதில்லை

இன்று ...

புற கூடுபோல் வாழ்வு சென்னை போன்ற பேரு நகரங்களில் ......

வேலை நிமித்தமாய் வேக வேண்டி யுள்ளது ....

பக்கத்துக்கு வீட்டில் யார் இருகிர்கள் என்று கூட தெரியாது ஒரு வருடமாய் ..

எப்போவது வரும் கூரியர் பையன் தவறாய் கேட்கும்போது அவர்கள் பேரு தெரியும் சரியாய் ...

எப்போதும் மூடியே இருக்கும் மரகதவு ...

அவர்களின் மனகதவும் ...

எதை அள்ளிக்கொண்டு போக போகிறோம் ....

சிரித்தால் கூட ஏதோ ஜந்துவை பார்ப்பது போலவே அவர்கள் சிரிப்பு இருக்கும் ...

இந்த வாழ்வில் ஓட்டமுடியமலும் ... பழைய வாழ்வை மறக்க முடியாமலும் ...

அந்தரத்தில் என்னை போன்ற பலர் ....

அலை பேசியும் டிவி யும் இல்லை என்றால் பெருநகரங்களின் வாழ்வு என்பது சாத்தியமில்லை ....

விஞ்ஞானம் காலடியி சுருங்கி விட்டது ... மனமும் கூட.,

அடிபட்டலோ அல்லது ஏதும் நடந்தாலோ ... உதவிக்கு யாரும் வருவாரில்லை ...

என்றே நினைக்கிறன் ....

ஜனசமுத்திரத்தில் தொலைந்து போனேன் ...

எல்லோரும் இருந்தாலும் யாருக்காவும் இல்லை என்ற உணர்வே இங்கு ....

பொதி சுமக்கும் கழுதையை போல ...

ஓடும் வாழ்வு ...கரைந்து கொண்டே இருக்கிறது ... யாருக்கும் தெரியாமலே ....