Friday, 25 March 2011

முற்றம் வைத்த வீடு அது ....

முற்றம் வைத்த வீடு அது ....

எப்போதும் யாராவது சொந்தங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ...

நடமாடி கொண்டே இருப்பார்கள் ....

எனக்கும் அக்காவிற்கும் எப்போதும் சண்டை நடக்கும் ..

மழை காலத்தில் யார் முற்றதில் கொட்டும் நீரில் குளிப்பது என்று ///

பத்தாதற்கு பக்கத்துக்கு வீடு சிறுவர்கள் வேறு .....

ஆனால் சண்டை இட்டாலும் எல்லோரும் குளிப்போம் ..முற்றத்து அருவியில் ...

நான் நினைப்பது உண்டு எதற்கு தலைவாசல் கதவு என்று ..

எப்போதும் திறந்தே இருக்கும் .. யாரோ வருவதும் [போவதுமாய் .....

அடுப்பில் அம்மா இருந்தபடியே.,,,,

கதவு குளிர் கால அரணாக மட்டும்மே பயன்படும் ...

மற்ற நேரங்களில் ஓரமாய் சாதுவை போல் இருக்கும் ....

மிக பெரிய வீடு என்பாதலே எவளோ பேர் வந்தாலும் ...தெரியாது ...

சொந்தங்கள் கூடிய நாட்கள் அது .... நாய்குட்டிகள் கூட நடு வீட்டில் தூங்கும் ,,,

யாரும் ஒன்றும் சொல்வதில்லை

இன்று ...

புற கூடுபோல் வாழ்வு சென்னை போன்ற பேரு நகரங்களில் ......

வேலை நிமித்தமாய் வேக வேண்டி யுள்ளது ....

பக்கத்துக்கு வீட்டில் யார் இருகிர்கள் என்று கூட தெரியாது ஒரு வருடமாய் ..

எப்போவது வரும் கூரியர் பையன் தவறாய் கேட்கும்போது அவர்கள் பேரு தெரியும் சரியாய் ...

எப்போதும் மூடியே இருக்கும் மரகதவு ...

அவர்களின் மனகதவும் ...

எதை அள்ளிக்கொண்டு போக போகிறோம் ....

சிரித்தால் கூட ஏதோ ஜந்துவை பார்ப்பது போலவே அவர்கள் சிரிப்பு இருக்கும் ...

இந்த வாழ்வில் ஓட்டமுடியமலும் ... பழைய வாழ்வை மறக்க முடியாமலும் ...

அந்தரத்தில் என்னை போன்ற பலர் ....

அலை பேசியும் டிவி யும் இல்லை என்றால் பெருநகரங்களின் வாழ்வு என்பது சாத்தியமில்லை ....

விஞ்ஞானம் காலடியி சுருங்கி விட்டது ... மனமும் கூட.,

அடிபட்டலோ அல்லது ஏதும் நடந்தாலோ ... உதவிக்கு யாரும் வருவாரில்லை ...

என்றே நினைக்கிறன் ....

ஜனசமுத்திரத்தில் தொலைந்து போனேன் ...

எல்லோரும் இருந்தாலும் யாருக்காவும் இல்லை என்ற உணர்வே இங்கு ....

பொதி சுமக்கும் கழுதையை போல ...

ஓடும் வாழ்வு ...கரைந்து கொண்டே இருக்கிறது ... யாருக்கும் தெரியாமலே ....

No comments:

Post a Comment