கண்ணன்திருவோணம்
Thursday, 23 February 2012
உதிரும் இலை
காற்றில் எழுதிச்செல்கிறது
இயற்கையின் பெரும் ரகசியத்தை
தேடித்தேடி
ஓ மானிடனே
விருட்சத்தின் வேரறுத்துவிட்டு
வெற்றிடத்தில் எதை தேடுகிறாய்
காற்றும் அலைகிறது பெருவெளியில்
தரு தேடித்தேடி
இந்த புவியும் அழியும் ஒருநாள்
அண்ட பெருவெளியில் ஒரு துகளாய்
கரையும்
ஓ மானிடா
மறைவதற்கும் மாற்றுவதற்கும்
வேறு இடமா தேட போகிறாய்
இயற்கையின் கண்ணீர்
மழை
இயற்கையின் கண்ணீர்
காடுகளின் மயானத்தின் மீது ,
இனியொரு மரம் நடுவோம்
இயற்கையோடு இசைந்தே
வாழுவோம்
நிழல் திருடன்
ஓ மானிடனே
நிழல்களை திருடிவிட்டு
வெய்யிலை விதைத்து கொண்டிருக்கிறாய்
ஒருநாள் அதுவும் அறுவடையாகும்
யாருக்கும் தெரியாமல்
என்ன செய்ய போகிறாய் ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)