Thursday, 23 February 2012

தேடித்தேடி

ஓ மானிடனே
விருட்சத்தின் வேரறுத்துவிட்டு
வெற்றிடத்தில் எதை தேடுகிறாய்
காற்றும் அலைகிறது பெருவெளியில்
தரு தேடித்தேடி
இந்த புவியும் அழியும் ஒருநாள்
அண்ட பெருவெளியில் ஒரு துகளாய்
கரையும் 
ஓ மானிடா
மறைவதற்கும் மாற்றுவதற்கும்
வேறு இடமா தேட போகிறாய்

No comments:

Post a Comment